இந்த குடும்பத்தில் 16 நபர்கள் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளனர். டாக்டர் மவுலின் படேலின் தந்தை அசோக் படேல் (72), தாய் சகுந்தலா (71) ஆகியோர் 98 முறை ரத்த தானம் செய்துள்ளனர். சத்ய சாய் பாபா கடந்த 1985ல் அகமதாபாத் நிகழ்ச்சியில்,’ ரத்தம் திரவமான அன்பு. அதை மற்றவர்களிடம் பாய்ச்சுவோம்’ என்று கூறியதால் ஈர்க்கப்பட்ட ரமேஷ் பட்டேல் முதன்முதலாக ரத்ததானம் செய்துள்ளார். அவரின் வழியாக தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் ரத்ததான சேவையில் ஈடுபட்டுள்ளது. இதை தொடங்கி வைத்த 76 வயதான ரமேஷ் பட்டேல் 94 முறை ரத்த தானம் செய்துள்ளார். ரமேஷ் பட்டேலின் மகள் டிம்பிள், மகன் அமுல், ரமேஷ் பட்டேலின் சகோதரர் பாரத் பட்டேல் ஆகியோர் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறார்கள்.
The post குஜராத்தில் 40 ஆண்டுகளாக தானம் ஒரே குடும்பத்தில் 27 பேர் 630 லிட்டர் ரத்த தானம் appeared first on Dinakaran.