அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை உயர்வு!

சென்னை : தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை ரூ. 30 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளன.1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 – 40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 -50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40 – 70 வரையும், 9-12 வகுப்பு புத்தகங்கள் ரூ.50 – 80 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒருசில புத்தகங்கள் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளன. காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: