மார்ச் 4ம் தேதி ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5930க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.47,440க்கும் விற்கப்பட்டது. மார்ச் 5ம் தெரஃஹி கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,015க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.48,120க்கும் விற்கப்பட்டது. அதே போல் மார்ச் 6ம் தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ. 48,320க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து மார்ச் 7ம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.48,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,090க்கு விற்பனையாகிறது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது நகை வாங்குவோருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே உயர்ந்தால் வரும் மாதங்களில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நகை வாங்குவோரிடையே நிலவி வருகிறது.
The post ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.49,000ஐ நெருங்கியது.. வரும் மாதங்களில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்து விடுமோ? appeared first on Dinakaran.