இப்படி வீணாய் உன் உடலை கெடுத்துகொண்டாயே!’’ என அவனுக்காகவருந்தினார்கள்.இறைமக்களே, இறைவேதம் ‘‘அவருக்குள் (இயேசு கிறிஸ்துவுக்குள்) ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது’’ (கொலோசெயர் 2:3) என தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆம், இயேசு கிறிஸ்துவை நமக்கு சொந்தமாக்கினால் போதும். மற்றனைத்தும் அவருக்குள் இருக்கிறது. அவர் வாயிலாக நமக்கு கிடைக்கிறது. எனவே தேவன் நமக்கு கொடுக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.நாம் வாழ்வில் வெற்றி பெற எல்லா கிரயத்தையும் தேவன் ஏற்கனவே சிலுவையில் செலுத்திவிட்டார். எனவே இயேசு என்னும் நாமத்தில் இறை சித்தத்தை பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். உங்களுக்கு அவசியமாக இம்மைக்குரிய மற்றும் இறை ஆசீர்வாதங்கள் அனைத்தும் எங்கேயோ அல்ல, உங்கள் அருகே தான் இருக்கிறது. இறைவனை விஸ்வாசித்து, அவர் பாதையில் நடப்போருக்கு சகலமும் நிறைவாகவும், நன்மையாகவும் நடக்கும் என்பது நிச்சயமே!
அருள் முனைவர்: பெ.பெவிஸ்டன்
The post இறைவன் கிரயம் செலுத்திவிட்டார் appeared first on Dinakaran.