செல்லூர் ராஜூ அண்ணே… அது கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம்: மாஸாக பதிலளித்த அமைச்சர் சிவசங்கர்!

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். தென்மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை சென்னையின் உள்ளே வந்து விட வேண்டும். அதிகாலையில் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் என்று புகார் கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்; செல்லூர் ராஜூ அண்ணே… அது கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம் அந்த Clarity வரணும்… அந்த குழப்பம் உங்களுக்கே இருக்கு. கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக ஆட்சியில் 30 சதவீத பணிகள் தான் நிறைவுபெற்றிருந்தது.

பணிகளை விரைவாக முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது திமுக அரசு. பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் யாரும் புகார் கூறவில்லை. பேருந்தில் பயணம் செய்யாதவர்கள் தான் புகார் கூறி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் பேருந்து எண்ணிக்கை குறைவு என்பது தவறான குற்றச்சாட்டு. கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் போதுமான பேருந்து உள்ளன. வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 20% பேருந்துகள் இயக்கம். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பட்டு வருகிறது. செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை நேரடியாக அழைத்து செல்ல தயார் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; கிளாம்பாக்கத்தில் 100 கோடி அளவிலான பணியை திமுக அரசு மேற்கொண்டது. கிளாம்பாக்கத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கு தேவையான வசதி உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை. இரவு நேரத்தில் பேருந்துகள் இல்லை என்ற குறைபாடு மட்டும் தான் வருகிறது. கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் 6 மாதத்திற்குள் அமைக்கப்படும். என்று கூறினார்.

The post செல்லூர் ராஜூ அண்ணே… அது கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம்: மாஸாக பதிலளித்த அமைச்சர் சிவசங்கர்! appeared first on Dinakaran.

Related Stories: