அக்சர் படேல் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, உறுதியுடன் விளையாடிய கில் சதம் விளாசி அசத்தினார். கில் 104 ரன் (147 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), அக்சர் 45 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்களில் ஓரளவு தாக்குப்பிடித்த அஷ்வின் 29 ரன் எடுத்தார். பாரத் 6 ரன் எடுக்க, குல்தீப் மற்றும் பும்ரா டக் அவுட்டாகினர். இந்தியா 2வது இன்னிங்சில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (78.3 ஓவர்). முகேஷ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஹார்ட்லி 4, ரெஹான் 3, ஆண்டர்சன் 2, பஷிர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 399 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சி தொடங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்துள்ளது (14 ஓவர்). டக்கெட் 28 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் பாரத் வசம் பிடிபட்டார். கிராவ்லி 29 ரன், ரெஹான் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 332 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.
The post சதம் விளாசினார் கில் இங்கிலாந்துக்கு 399 ரன் இலக்கு: பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட் appeared first on Dinakaran.