தோட்டத்தில் பதுக்கி வைத்த 3 துப்பாக்கி, 20 தோட்டா பறிமுதல்: 3 பேர் கைது

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்தவர் சரவணக்குமார்(38). இவர், அனுமதியின்றி துப்பாக்கிகள், தோட்டாக்கள் வைத்திருப்பதாக வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் மாலை இவரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது வீடு, தோட்டத்தில் சோதனை நடத்தியதில் 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக நேற்று பிளவக்கல் அணையை சேர்ந்த வனராஜ், திண்டுக்கல்லை சேர்ந்த நிகில் (32) ஆகியோரையும் கைது செய்தனர். இதில் நிகில் திண்டுக்கல்லில் பட்டாசு கடை வைத்திருப்பதும், இவரிடம் தான் தோட்டாவுக்கு மருந்து பொருட்கள் வாங்கியதும் தெரியவந்தது. போலீசார் கூறுகையில், ‘‘வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு துப்பாக்கி, தோட்டாக்களை வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

The post தோட்டத்தில் பதுக்கி வைத்த 3 துப்பாக்கி, 20 தோட்டா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: