இந்நிலையில் தேர்தல் ஓய்ந்த நிலையில் அரசியல் தலைவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 17ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சொகுசு விமானத்தில் லண்டன் புறப்பட்டார். அவரது மனைவி பாரதியும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நேற்று முன்தினம் தனது மனைவி புவனேஸ்வரியுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சிறப்பு விமானத்தில் அவர் சென்றதாக தெரிகிறது. அங்கு அவர் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டு சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது.
The post ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமெரிக்கா பயணம்: மருத்துவ சிகிச்சைக்கு சென்றதாக தகவல் appeared first on Dinakaran.
