மூளையில் கட்டி பாதிப்பு: மாஜி முதல்வர் அட்மிட்

மும்பை: மக்களவை முன்னாள் சபாநாயகரும், சிவசேனா கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான மனோகர் ஜோஷி (85), கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மனோகர் ஜோஷிக்கு மூளையில் கட்டி உள்ளது.

தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தாக்கரே ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று ஜோஷியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

The post மூளையில் கட்டி பாதிப்பு: மாஜி முதல்வர் அட்மிட் appeared first on Dinakaran.

Related Stories: