இதில், அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் ஜெயபால் (48), ஆலை மேற்பார்வையாளர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (53) ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த சண்முகராஜ் குடும்பத்துக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
The post பட்டாசு ஆலை வெடித்து தொழிலாளி பரிதாப சாவு: முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரண உதவி appeared first on Dinakaran.