இந்த கூட்டத்தில், உள்நாட்டிலேயே கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ரூ.40,000 கோடி செலவில் மேலும் ஒரு விமானம் தாங்கி கப்பல், எச்ஏஎல் தயாரிப்பில் ரூ.55,000 கோடி செலவில் கூடுதலாக 97 தேஜஸ் மார்க்-1ஏ போர் விமானங்கள் மற்றும் சியாச்சின், கிழக்கு லடாக் பகுதிகளின் பனிமலை உச்சியில் பாதுகாப்பு பணிக்காக ரூ.45,000 கோடி செலவில் 156 இலகு ரக பிரசாண்ட் ஹெலிகாப்டர்கள் (ராணுவத்துக்கு 90, விமானப்படைக்கு 66) தயாரிக்க என மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடி செலவில், 3 புதிய மெகா ராணுவ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்த முன்மொழிவுகளுக்கான தேவைக்கு அனுமதி வழங்கப்பட்டதும் ஒப்பந்தபுள்ளி கோருவது தொடர்பான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ரூ.1.4 லட்சம் கோடியில் போர் விமானம், ஹெலிகாப்டர்கள்: பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.