5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. புதிதாக 4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் 7,171 பேருக்கும், நேற்று காலை 8 மணியுடன் முடிவுற்ற நிலரப்படி 5,874 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணி வரை வௌியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் 4,282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை 47,246 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரத்து 671ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 547ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,037 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதால் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 70 ஆயிரத்து 878ஆக உயர்ந்துள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: