இதை அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த எஸ்எஸ்ஐ ராஜேஸ்வரி கேட்டபோது தன்னிடம் மரியாதை இல்லாமல் பேசுவதாகவும், தான் ஒரு பிரபலம், என்னை தெரியாதா?, என்னிடம் இப்படி பேசலாமா? எனக் கேட்டு தகராறு செய்து ஷர்மிளா வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதில், ‘‘இந்த போலீஸ் அதிகாரி பணம் வாங்குகிறார், போக்குவரத்தை கவனிப்பதில்லை’’ என்று கூறியிருந்தார். இந்த பதிவுக்கு சிலர் தகாத முறையில் கமெண்ட் பதிவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெண் போலீஸ் அதிகாரி மீது அவதூறு கோவை ஷர்மிளா மீது போலீஸ் வழக்குப்பதிவு: பஸ் ஓட்டி வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் appeared first on Dinakaran.