நோய் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சல், அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். தனியார் மருத்துவமனைகளுக்கு நேரம் செலவிடும் அரசு மருத்துவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மக்கள் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதை தடை செய்வதற்கும் தயங்க மாட்டோம். தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு என்ன உரிமை கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
The post பெண்களுக்கு ரூ.1000 தமிழிசை வரவேற்பு appeared first on Dinakaran.