அப்போது தமிழக அரசின் சார்பில், ‘குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சங்கர், சட்ட ஒழுங்குக்கு எதிராக செயல்பட்டுள்ளார். பெண் காவலர்களுக்கு எதிராக அவதூறு பரப்பினார். மாநில அரசுக்கும், முதல்வருக்கும் எதிராக பேசினார். இவர் மீது நான்கு வழக்குகள் உள்ளதால், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதியப்பட்டது. எனவே சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது. சவுக்கு தரப்பில், ‘பல வழக்குகள் இருந்தாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு’ என்று கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சங்கர் நடந்து கொண்ட விதம் மன்னிக்க முடியாதது. இருந்தாலும் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியுமா? முடியாதா? என்பதை ஆராய வேண்டும். எனவே இவ்வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி, வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
The post பெண் காவலர்களை அவதூறாக பேசிய யூடியூபர் சங்கரின் செயலை மன்னிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.