அந்த சமயத்தில் அனிதாவின் தம்பி மாதவன் வந்து ராஜியிடம் கடும் வாக்குவாதம் செய்ததுடன், ‘’எனது அக்காவை தட்டிக் கேட்பதற்கு நீ யார்’’ என்று கூறி அங்கு கிடந்த பீர்பாட்டிலை எடுத்து உடைத்து ராஜியின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் அவருக்கு வலது பக்க காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து 6 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post “செல்போனில் பேசக்கூடாது’’ என்று மருமகளை கண்டித்த மாமனாருக்கு பீர்பாட்டிலால் சரமாரியாக குத்து appeared first on Dinakaran.