சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு

சென்னை: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்தனர். விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ சுரண்டை – வாடியூர் சாலையில் விபத்தில் சிக்கியது. வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில் ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக தென்காசி, ஆலங்குளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: