இதுபோல் ஏரியில் படகு சவாரி, ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் சென்று குதூகலித்தனர். தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளிலும் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து ரசித்தனர். கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக காலையில் வெயில், நண்பகலில் சாரல் மழை, மாலையில் குளிர் என சூழல் மாறி மாறி இருந்து வருகிறது. இந்த மாறுபட்ட சூழலை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்து சென்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஒரு சில இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும் கொடைக்கானலுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் சுற்றுலாத் தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post இளவரசியை ரசிக்க… இ-பாஸ் எல்லாம் ஒரு தடையா? காலையில் வெயில், பகலில் சாரல், இரவில் குளிர்: காலநிலை மாறி, மாறி கலக்குது கொடைக்கானல் appeared first on Dinakaran.