மின் கட்டண உயர்வை கண்டித்து 25ம் தேதி ஆர்ப்பாட்டம்: தேமுதிக அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுதல், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகளை தவறாமல் வழங்குதல், காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேமுதிக சார்பில் வரும் 25ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்து தேமுதிக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்ற வேண்டும்.

The post மின் கட்டண உயர்வை கண்டித்து 25ம் தேதி ஆர்ப்பாட்டம்: தேமுதிக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: