கல்லூரி மாணவ – மாணவிகள் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான வடிவமைப்பினை ஏற்படுத்தி, தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட போலீஸ் எஸ்பி தலைமையில் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், கட்டவாக்கம் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின், அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம், 100 சதவீதம் வாக்கு பதிவு குறித்த தேர்தல் ஆணையத்தின் குறும்படங்கள், பொதுமக்கள் அறிந்திடும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, மகளிர் திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயசித்ரா, சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் சீனிவாசு, வேதியியல் துறை தலைவர் வெங்கட்ரமணன், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு: மாவட்ட போலீஸ் எஸ்பி பங்கேற்பு appeared first on Dinakaran.