இப்படித்தான் மருத்துவத்துறையை அவர்கள் நிர்வகித்து வந்தார்கள் எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும், அவருடைய ஆட்சிக்காலமாக ஆக இருந்தாலும், அதற்கு முன்னாள் இருந்த அவருடைய அந்த பத்தாண்டு கால ஆட்சியில் மருத்துவ துறையின் லட்சணம் இதுவாகத்தான் இருந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக இந்த துறைக்கு தேவையான இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள். சுகாதார ஆய்வாளர்கள் போன்ற பணியிடங்கள் 1583 நிரப்பப்பட்டு இருக்கிறது, ஆக இந்த துறையில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 6,744 மருத்துவ துறை பணியாளர்களுக்கு புதிய பணி ஆணைகள் தரப்பட்டிருக்கிறது. இந்த தகவல் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
The post எடப்பாடி ஆட்சியில் 116 மருத்துவர்களுக்கு தண்டனை இடமாற்றம் செய்த கொடூரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை appeared first on Dinakaran.