×

எடப்பாடி சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் சொல்வேன்: ஓபிஎஸ்

சேலம்: ஓபிஎஸ் அணியின் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் அரசியலை விட்டு விலகினால் எடப்பாடிக்கு மகிழ்ச்சி. எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகினால் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி. நான்கரை ஆண்டுகள் பாஜவின் ஆதரவோடு தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. நான் நீதிமன்றத்தை மதிப்பவன். எத்தனை முறை எனக்கு சாதகமற்ற தீர்ப்பு வந்தாலும் அதை விமர்சிப்பதில்லை.

என்றாவது ஒரு நாள் நீதி வெல்லும். எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டிய ரகசியத்தை உரிய நேரத்தில் சொல்வேன். பழனிசாமி ஏற்றுக்கொண்டால் அவரோடு இணைவேன் என்ற இழிநிலைக்கு எப்போதும் செல்லமாட்டேன். ஏற்கனவே டிடிவி தினகரனோடு ஒன்றுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சசிகலா எங்களோடு இணைவது குறித்து அவரே முடிவெடுப்பார். மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை (இன்று) நேரில் செல்வதால் கரூர், திண்டுக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

The post எடப்பாடி சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் சொல்வேன்: ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : Edappadi Jail ,OPS ,Salem ,rescue ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Edappadi ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது