அப்போது, சார்ஜ் போட்டிருந்த பேட்டரி பைக்கும், அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சௌந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான மற்றொரு பெட்ரோல் வாகனமும் எரிந்து கொண்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த புருஷோத்தமன் கூச்சல் போட்டார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து தண்ணீர் மற்றும் மண்ணால் தீயை அணைத்தனர். மேலும், சிறுசேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 2 பைக்குகளும் முழுவதுமாக தீயில் எரிந்து சாம்பலாயின. இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இ-பைக்குக்கு சார்ஜ் போட்டபோது தீப்பிடித்து எலும்புகூடான வாகனங்கள் appeared first on Dinakaran.