அதன்படி, போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மயக்கம் காரணமாக சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. மேலும் அவருக்கு போதை மருந்து ஊசி மூலம் உடலில் செலுத்தியதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது உதவி ஆய்வாளர் ராஜி தனக்கு ஊசி போட்ட சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். அதன் பிறகு உடல் முழுவதும் எனக்கு கடுமையான வலி இருந்ததாக கூறினார்.
பின்னர் போலீசார் சிறுமியின் வாக்குமூலம் மற்றும் டாக்டர்கள் அளித்த அறிக்கையின்படி மகளிர் போலீசார் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜி மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் சிறுமியின் தந்தை உதவி ஆய்வாளர் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தந்தை மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post போதை ஊசி போட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஆயுதப்படை எஸ்ஐ கைது: டாக்டர்கள் பரிந்துரைப்படி போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.
