நாய்குட்டியை சுட்டுக் கொன்ற டாக்டர் கைது

திருச்சி: திருச்சி பாலக்கரை காஜாபேட்டையை சேர்ந்தவர் சையது அசைன் சாகித் (46). யுனானி மருத்துவர், அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் நாட்டு துப்பாக்கியால் அந்த பகுதியில் சாலைகளில் சுற்றிதிரியும் பறவைகளை சுட்டு கொண்டு வந்து வீட்டின் வாசலில் தொங்க விட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காஜாபேட்டை பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த நாய்குட்டியை தனது துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பாலக்கரை போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி மருத்துவர் சையதுஅசைன் சாகித்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

The post நாய்குட்டியை சுட்டுக் கொன்ற டாக்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: