திருச்சி: துறையூர் அருகே வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுப்பவர்களை மாவட்ட நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது என திருச்சி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். நரசிங்கபுரம் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
The post துறையூர் அருகே வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.