சேரன் தந்தையின் இறுதி சடங்குகள் பழையூர் பட்டியில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தனது சமூகவலைத்தள பக்கத்தில், அன்னையைப் போற்றி ஆயிரம் திரைப்படங்கள் நம்மை தாலாட்டிச் சென்றாலும் தவமாய் தவமிருந்து என்கிற ஒரு காவியத்தை படைத்து தந்தையர்களுக்கும் தமிழனுக்கும் பெருமைச் சேர்த்த மகா கலைஞன் திரு.சேரன் தன் தந்தையை இழந்து வாடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மகன் சேரனின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
The post இயக்குனரும் நடிகருமான சேரனின் தந்தை மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல்! appeared first on Dinakaran.