சென்னை: தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. முன்னிலையில் தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன் ஆணையாளராகக் கொண்டு நடந்தது. நேற்று முன்தினம் (26ம் தேதி) வேட்பு மனு வழங்கல், வேட்பு மனுதாக்கல், வேட்பு மனு பரிசீலனை மற்றும் வேட்பு மனு திரும்பப் பெறுதல் ஆகிய தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில், நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.