குறிப்பாக பாட்டியாலா, அம்பாலா, சண்டிகா், ஹரியாணா, டெல்லி, பரேய்லி, வாரணாசி மற்றும் குவாலியா் உள்ளிட்ட இடங்களில் காண்புதிறன் 30 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில், உ.பி. மாநிலம் மீரட்டில் நாட்டிலேயே மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய ரயில்கள் தாமதமாக வந்தன.
எனவே, வாகன ஓட்டுநா்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் வாகனங்களை இயக்கும்படி வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் விமானங்கள், ரயில்கள், பேருந்து பயணங்களுக்கு முன்பாக வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொண்டு எந்த விதமான போக்குவரத்து முறையையும் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
The post டெல்லி, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.. கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.