வெடிவிபத்தில் எனது கணவர் உயிரிழந்ததால் வாழ்வாதாரத்தை காக்க ரூ.40 லட்சம் இழப்பீடும் அரசு வேலையும் தர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி பட்டாசு தொழிற்சாலைகளின் மேற்பார்வையாளராக செயல்படும் அலுவலர்கள் யார்? என்றும் விபத்துக்கான காரணம், விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் குறித்து வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலர் பதில்தர உத்தரவிட்டார். மேலும் அரசு மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
The post பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யார்?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.