இதையடுத்து நேற்று முன்தினம் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்குப்பின் ஒடுகத்தூர் ஆத்துமேடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, குழந்தையை கொன்று புதைத்தது தொடர்பாக ஜீவா, அவரது மனைவி டயானா மற்றும் ஜீவாவின் தாய் பேபி ஆகிய 3 பேரையும் நேற்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் பிடித்தனர். அதேபோல், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்த சேர்பாடி ஊராட்சி செயலாளர் உமாபதியையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஜீவா, அவரது மனைவி டயானாவை போலீசார் கைது செய்தனர்.
The post விஷப்பால் ஊற்றி குழந்தையை கொன்ற தம்பதி கைது appeared first on Dinakaran.