அதனால் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு, பாஜ எம்பி சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கர்நாடகா அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா நிதி முறைகேடு தொடர்பான வழக்கை சிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளோம். சிஐடி காவல் கண்காணிப்பாளர் ராகவேந்திர ஹெக்டே தலைமையிலான குழு, கொரோனா நிதி முறைகேடு தொடர்பான விசாரணையை நடத்தும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு சிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
The post கொரோனா நிதியில் ரூ.1000 கோடி ஊழல் புகார் சிஐடி விசாரணைக்குழு அமைப்பு: எடியூரப்பாவுக்கு சிக்கல் appeared first on Dinakaran.
