இந்த நிலையில், ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் விபத்தில், கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை என ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கோரமண்டல் ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைத்ததால் தான் ஓட்டுநர் ரயிலை இயக்கியதாகவும், அனுமதிக்கப்பட்ட வேகமான 130 கிமீ வேகத்தை விட 128 கிமீ வேகத்திலேயே ரயில் சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், பச்சை சிக்னல் கிடைத்ததால்தான் லூப் லைனிற்குள் கோரமண்டல் விரைவு ரயில் நுழைந்தது. நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் தான் கோரமண்டல் விரைவு ரயில் மோதியது எனவும் கூறியுள்ளார்.
The post கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை: சிக்னல் பிரச்னையால் தான் சரக்கு ரயில் மீது மோதியது என விசாரணையில் தகவல்.! appeared first on Dinakaran.