அரசு மருத்துவமனையில் அக்குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் மருத்துவ மனையிலிருந்து அக்குழந்தையைப் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அந்த குழந்தைக்கு “ஆனந்த்” என்று பெயர் சூட்டி, அக்குழந்தையின் நலனிற்காக திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, நன்னடத்தை அலுவலர் சையத் ரவூப், குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்ஸிலியா, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post கோயில் குளக்கரை அருகே மீட்கப்பட்ட குழந்தைக்கு ஆனந்த் என பெயர் சூட்டி குழந்தைகள் நலக்குழுவிடம் கலெக்டர் ஒப்படைப்பு appeared first on Dinakaran.