தென்னை நார் இயந்திரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி

பழநி: ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியை சேர்ந்தவர் நித்தேந்திரா (29). இவரது மனைவி சஜானா (26). இவர்களது மகள்கள் சுஷ்மிதா (4), ஜூமிதா(2). நித்தேந்திரா திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சந்தன்சட்டிவலசு பகுதியிலுள்ள தென்னை நார் ஆலையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று தம்பதி ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது குழந்தை ஜூமிதா தென்னை நார் இயந்திரத்தில் தவறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

The post தென்னை நார் இயந்திரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Related Stories: