இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் காஜாமைதீன் தலைமையிலான பாம்பு பிடி வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அரியவகையும், கொடிய விஷமுள்ள பெண் ராஜநாகத்தை 2 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் அதன் உடல் நிலை குறித்து ஆய்வு செய்தபோது இரை எதுவும் விழுங்காமல் சோர்வாக இருந்தது தெரியவந்தது.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அருகில் உள்ள குஞ்சப்பனை வனத்தில் பத்திரமாக விடுவித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: இந்த வகை பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டாலும் இதுபோல் ஒரே இடத்தில் சோர்வுடன் காணப்படும். கடந்த 2 தினங்களாக இரை உட்கொள்ளாததால் பாம்பால் நகர இயலவில்லை. தற்போது அதற்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதியில் விடுவித்துள்ளோம். இனிமேல் ராஜநாகம் தானாகவே இரைதேடிக்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post கோவையில் குடியிருப்பு அருகே இனச்சேர்க்கையால் 2 நாள் சோர்வாக கிடந்த அரியவகை பெண் ராஜநாகம் appeared first on Dinakaran.