கோவை: கோவை நகைக்கடை கொள்ளை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளையன் கடையின் பின்பக்கம் வாயிலாக ஆட்டோவில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.