கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு..!!

கோவை: கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சியில் 29-வது வார்டு கவுன்சிலராக ரங்கநாயகி உள்ளார். ரங்கநாயகியை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சியின் 7-வது மேயராக ரங்கநாயகி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

The post கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: