அதன்படி, 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த 4 கல்லூரிகளும் தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லா பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லா பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடரா செலவினத்திற்காக மொத்தம் ரூ.8 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளில் உள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெறுவார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, கோவி.செழியன், தலைமை செயலாளர் முருகானந்தம், உயர்கல்வி துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக வேலூர் மாவட்டத்தில் இருந்து அமைச்சர் துரைமுருகன், எம்பி கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் நந்தகுமார், அமலு, கார்த்திகேயன், மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலட்சுமி மற்றும் திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் ஆறுமுகம், பதிவாளர் செந்தில்வேல் முருகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், திருச்சி மாவட்டத்தில் இருந்து அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் தியாகராஜன், ஸ்டாலின் குமார், கதிரவன், கலெக்டர் பிரதீப் குமார், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன்,கலெக்டர் தர்ப்பகராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்கள் ஏ.ஜெ.மணிகண்ணன், த.உதயசூரியன், கலெக்டர் பிரசாந்த், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வேலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
