இதையடுத்து, நேற்று முன்தினம் அனிகிரிப்பள்ளி சென்றுவிட்டு கார்த்திக், நேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். மாலை 5 மணியளவில் ஓசூரை தாண்டி, பேரிகை அருகே சூலகுண்டா என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் அவரை திடீரென வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில், சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அனிகிரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நாராயணப்பா மகன் பிரதாப்(30) உள்பட 3 பேர், நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கார்த்திக்கை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சூளகிரி அருகே பரபரப்பு; திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல் appeared first on Dinakaran.