இதுகுறித்து பிங்டிங்ஷான் தியனன் நிலக்கரி சுரங்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘நிலக்கரி சுரங்கத்தில் மொத்தம் 425 பேர் பணியாற்றி வந்தனர். சுரங்கத்திற்குள் ஏற்பட்ட திடீர் விபத்தில் 8 பேர் பலியாகினர். 8 பேரை காணவில்லை. 380 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை தேடி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சீன சுரங்கத்தில் சிக்கி 8 பேர் பலி: மேலும் 8 தொழிலாளர்கள் மாயம் appeared first on Dinakaran.