இந்நிகழ்ச்சியில் பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பெண் காவலர்களுக்கு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி எம்.பி., எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது;
காவல்துறையில் மகளிர் பங்காற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததன் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகப்பேறு சமயங்களில் விடுப்பு இல்லாமல் பல இக்கட்டுகளுக்கு உள்ளான பெண் காவலர்களுக்கு, மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது.
மேலும், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள், குழந்தையைப் பராமரிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்குக் கணவர் அல்லது பெற்றோர் வசிக்கக் கூடிய மாவட்டங்களில் பணியைத் தொடரலாம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பெண் காவலர்களுக்கு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது: கனிமொழி எம்.பி. நன்றி!! appeared first on Dinakaran.