சென்னை அயனாவரத்தில் உள்ள குப்பை தொட்டியில் கிடந்த துப்பாக்கி, தோட்டாவால் பரபரப்பு

சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள குப்பை தொட்டியில் துப்பாக்கியும் 7 தோட்டாக்களும் கிடந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சி அடிப்படையில் துப்பாக்கியை வீசியதாக கருதப்படும் பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள குப்பைத்தொட்டியிலிருந்து துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குப்பை தொட்டியில் துப்பாக்கியும், தோட்டாக்களும் இருப்பதை கண்டு தூய்மை பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு பெண் குப்பை தொட்டியில் இந்த பொருட்களை வீசிச்செல்வது பதிவாகியிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அப்பகுதியில் ஜெனிஷா ஜோசப் என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், குப்பைத்தொட்டியில் துப்பாக்கியையும், தோட்டங்களையும் வீசியது தான் என ஜெனிஷா ஜோசப் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த பெண் கூறியதாவது, “என் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார், அவர் பயன்படுத்தி வந்த தேவையில்லாத பொருட்களை குப்பைத்தொட்டியில் வீசினேன். அதில் இந்த பொருட்கள் இருந்தது. இதுதவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது” என அந்த பெண் கூறியுள்ளார்.

குப்பைத்தொட்டியில் துப்பாக்கியும் 7 தோட்டாக்களும் கிடந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சென்னை அயனாவரத்தில் உள்ள குப்பை தொட்டியில் கிடந்த துப்பாக்கி, தோட்டாவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: