அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் 13ம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக செமி கிரையோஜினிக் பவர் ஹெட் இன்ஜின் நேற்று பிற்பகல் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் மகேந்திரகிரி திரவ எரிபொருள் திட்ட வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்கள் முன்னிலையில் 4 விநாடிகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது.
The post சந்திராயன்-3 விண்கலத்தில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜினிக் பவர் ஹெட் சோதனை ஓட்டம் வெற்றி: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.