தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Related Stories: