அப்போது எதிர்பாராத நிலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென வினோத் கழுத்தில் இருந்த செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு ஓடும் மின்சார ரயிலில் இருந்து எகிறி குதித்து பிளாட்பாரத்தில் ஓடினார். இதனால், அதிர்ச்சி அடைந்த வினோத் உடனடியாக ரயிலில் இருந்து குதித்து மர்ம நபரை பிடிக்க முயன்றார். இதற்கிடையில், கணவர் ரயிலில் இருந்து குதித்ததை பார்த்ததும் மேலும் அதிர்ச்சி அடைந்த ஹேமமாலினியும் ஓடும் ரயிலில் இருந்து குதித்து, கணவரை காப்பாற்ற முயன்றார். இதில் கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் வினோத் மற்றும் அவரது மனைவி ஹேமமாலினியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
ஹேமமாலினி ரயிலில் இருந்து குதிக்கும்போது அவர் வைத்திருந்த பை, செல்போன் போன்றவற்றை ரயிலிலேயே விட்டுவிட்டார். அப்போது, பயணி ஒருவர் ரயில் பெட்டியில் இருந்த செல்போன், பை மற்றும் செயினை பறித்தபோது துண்டாகி விழுந்து கிடந்த செயின் ஒரு பகுதியை மீட்டு பத்திரமாக அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, ஓடும் ரயிலில் பயணிடம் 4சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
The post செயின் பறித்த திருடனை பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த தம்பதி: படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.