இந்நிலையில் கடந்த 21ம் தேதி முதல் மாரிசெல்வத்தை காணவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில், தாளமுத்துநகர் போலீசார் விசாரித்து வந்தனர். சந்தேகத்தின்பேரில் மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. மாரிசெல்வம் என்ற அசால்ட், கடந்த 21ம் தேதி திரேஸ்புரம் உப்பு சங்க அலுவலகம் பின்புறம் வந்து கொண்டிருந்தபோது 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கியது. அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடி உள்ளார்.
இருப்பினும் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி செங்கலால் தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கும்பல் அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டது தெரிய வந்துள்ளது. மாரிசெல்வம் புதைக்கப்பட்ட இடத்தை சிறுவன் அடையாளம் காட்டினான். இன்று அந்த இடத்தில் விஏஓ முன்னிலையில் மாரிசெல்வத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை ேபாலீசார் ேதடி வருகின்றனர்.
The post செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.