நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கபினி அணையில் உபரிநீர் திறப்பு 25,000 கனஅடியாக அதிகரிப்பு

பெங்களூரு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கபினி அணையில் உபரிநீர் திறப்பு 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 14,600 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், தற்போது உபரிநீர் திறப்பு 20,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரியில் மொத்தம் 26,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கபினி அணையில் உபரிநீர் திறப்பு 25,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: