கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், மிசோரம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தல்களின் போது ரொக்கம், நகைகள், போதைப்பொருள்கள், மதுபானம் உட்பட ரூ.1,760 கோடி மதிப்பிலான இலவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவே இந்த 5 மாநிலங்களில் 2018ல் நடந்த தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட மதிப்பை (ரூ.239.15 கோடி) விட 7 மடங்கு அதிகம். 2023ம் ஆண்டு நடந்த அனைத்து சட்டப்பேரவை தேர்தலின்போதும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு, 2018ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்டதை விட 2 மடங்கு அதிகமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017ல் பறிமுதல் செய்யப்பட்டதை விட 2022ல் 6 மடங்கு அதிக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post ஒவ்வொரு தேர்தலின் போதும் பணம் பறிமுதல் அதிகரிப்பு: மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் appeared first on Dinakaran.