இது பொது இடம் இல்லை. என்னுடைய நிலம் என்று கூறியுள்ளார். இதனால் ஜெயராமனுக்கும், ராமலிங்கத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ராமலிங்கம், ஜெயராமனின் சாதி பெயரை கூறி மிகவும் ஆபாசமாக பொதுமக்கள் முன்பு பேசியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஜெயராமன் கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட முன்னாள் பாஜ நிர்வாகி ராமலிங்கம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கே.ேக.நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஓய்வுபெற்ற அரசு ஊழியரை ஆபாசமாக பேசிய முன்னாள் பாஜ நிர்வாகி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு: போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.